
சென்னை: சென்னை ஏழுகிணறு பகுதியில் வசிப்பவர் ஜன்னத் கனி (53). இவரது கணவர் ஸ்டீபன் தனியார் நிறுவனம் ஒன்றில் ஆலோசகராகப் பணியாற்றுகிறார். கடந்த 26-ம் தேதி ஸ்டீபன் அவரது மனைவி ஜன்னத் கனியை தொடர்பு கொண்டு புதுச்சேரியில் இருப்பதாகவும் அவசரமாக ரூ.1 லட்சம் வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
போலீஸில் புகார்: இதையடுத்து, ஜன்னத்கனி ரூ.1 லட்சத்தை அவரது கணவருக்கு ஜீபேமூலம் அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் வெகு நேரமாகியும் கணவர் வீடு திரும்பாததால் செல்போனில் அழைத்தார். ஆனால் செல்போன் சுவிட்ச்-ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த ஜன்னத் கனி, கணவரை கண்டுபிடித்துத் தருமாறு முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TpNWAbl
0 Comments