Crime

சென்னை: சென்னை ஏழுகிணறு பகு​தி​யில் வசிப்​பவர் ஜன்​னத் கனி (53). இவரது கணவர் ஸ்டீபன் தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் ஆலோ​சக​ராகப் பணி​யாற்​றுகிறார். கடந்த 26-ம் தேதி ஸ்டீபன் அவரது மனைவி ஜன்​னத் கனியை தொடர்பு கொண்டு புதுச்சேரியில் இருப்​ப​தாக​வும் அவசர​மாக ரூ.1 லட்​சம் வேண்​டும் எனவும் கேட்​டுள்​ளார்.

போலீஸில் புகார்: இதையடுத்​து, ஜன்​னத்கனி ரூ.1 லட்​சத்தை அவரது கணவருக்கு ஜீபேமூலம் அனுப்பி வைத்​துள்​ளார். இந்​நிலை​யில் வெகு நேர​மாகி​யும் கணவர் வீடு திரும்​பாத​தால் செல்​போனில் அழைத்​தார். ஆனால் செல்​போன் சுவிட்ச்​-ஆஃப் செய்​யப்​பட்​டிருந்​தது. அதிர்ச்சி அடைந்த ஜன்​னத் கனி, கணவரை கண்​டு​பிடித்​துத் தரு​மாறு முத்​தி​யால்​பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TpNWAbl

Post a Comment

0 Comments