Crime

சென்னை: மயக்க ஊசி போட்டு, 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போலீஸ் எஸ்ஐ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு தாயார் இல்லை. தந்தையும், தாத்தாவும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சிறுமி நேற்று முன்தினம் மாலை வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டார்.

இதையடுத்து, தாத்தாவும், தந்தையும் சிறுமியை சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக தேடியும் சிறுமியைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலை யில் நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள ஆயுதப்படை எஸ்ஐ ஒருவரது வீட்டில் சிறுமி மயக்க நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த சிறுமியின் தந்தை, மகளை மீட்டு உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5Fg1CNM

Post a Comment

0 Comments