
திருப்பூர்: கணவர் குடும்பத்தினர் சித்ரவதை செய்ததாக வாட்ஸ்அப்பில் தந்தைக்கு ஆடியோ அனுப்பிவிட்டு, காரில் இளம்பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கணவர், மாமனார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக கோட்டாட்சியர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் ஜெயம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கவின்குமார். இவரது மனைவி ரிதன்யா (27). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 28-ம் தேதி மொண்டிபாளையம் அருகே காரில் விஷமருந்தி ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/F7OPK2M
0 Comments