Crime

சென்னை: இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை கொடுங்கையூர் பகுதியில் வசித்து வந்த நித்யஶ்ரீ (26) என்ற இளம் பெண் கடந்த 5-ம் தேதி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீஸார் நித்யஸ்ரீ உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதல் கட்டமாக இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. போலீஸாரின் விசாரணையில் நித்யஸ்ரீயை கொலை செய்து, அவர் தற்கொலை செய்ததுபோல் நாடகமாடியது சைதாப்பேட்டையில் வசித்து வந்த, மருத்துவர் சந்தோஷ்குமார் (27) என்பது தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nBjyzwY

Post a Comment

0 Comments