Crime

திருவள்ளூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மகனை காப்பாற்ற முயன்ற தந்தை மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே மப்பேட்டை அடுத்துள்ள முதுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (61). இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி, சிந்து என்ற மகள், சந்தோஷ் குமார் என்ற மகன் உள்ளனர். இந்நிலையில், கிராமத்தில் சமீப காலமாக குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படு கிறது. ஆகவே, ஜோதி தன் மகன் சந்தோஷ்குமாருடன் சேர்ந்து, குடிநீர் தேவைக்காக தன் வீட்டின் பின்புறமாக 3 அடி அகலம் மற்றும் சுமார் 30 அடி ஆழத்துக்கு 20 நாட்களுக்கு மேலாக கடுமையாக உழைத்து, கிணறு தோண்டியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hNZl3Yd

Post a Comment

0 Comments