Crime

தாம்பரம்: தாம்பரம் சானிடோரியம் பகுதியில் உள்ள அரசு சேவை இல்லத்தில் தங்கிப் படித்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அரசு சேவை மைய காவலாளியை போலீஸார் கைது செய்தனர்.

தாம்பரம் சானிடோரியம் பகுதியில் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பாக அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 4 நாட்களுக்கு முன்பு அரசு சேவை இல்லத்தில் சேர்ந்து குரோம்பேட்டையில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சேவை இல்லத்தில் இருந்து எழுந்து வரும்போது மர்ம நபர் மாணவி முகத்தில் கைவைத்து அழுத்தி மயக்கம் அடைய செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9dIFyBj

Post a Comment

0 Comments