
சென்னை: தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் தொடர்புடைய 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் கடந்த 2013-ம் ஆண்டு சென்னையில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, கூட்டாளிகளான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் இருமாநில காவல்துறையினர் மேற்கொண்ட ஆபரேஷனில் சிக்கினர். இவர்களுடன் தொடர்புடைய அபுபக்கர் சித்திக்கை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், தற்போது அபுபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி முகமது அலி ஆகியோர் காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QXe0wyj
0 Comments