Crime

சென்னை: தமிழகத்தில் பல்வேறு சம்​பவங்களில் தொடர்புடைய 30 ஆண்டு​கள் தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோரை காவல் ​துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்​தில் ஆடிட்​டர் ரமேஷ் கொலை உள்​ளிட்ட பல்​வேறு வழக்​கு​களில் தொடர்​புடைய போலீஸ் பக்​ருதீன் கடந்த 2013-ம் ஆண்டு சென்​னை​யில் கைது செய்​யப்​பட்​டார். தொடர்ந்​து, கூட்​டாளி​களான பன்னா இஸ்​மா​யில், பிலால் மாலிக் ஆகியோர் ஆந்​திர மாநிலம் புத்​தூரில் இரு​மாநில காவல்​துறை​யினர் மேற்​கொண்ட ஆபரேஷனில் சிக்​கினர். இவர்​களு​டன் தொடர்​புடைய அபுபக்​கர் சித்​திக்கை காவல்​துறை​யினர் தேடி வந்​தனர். இந்​நிலை​யில், தற்​போது அபுபக்​கர் சித்​திக் மற்​றும் திருநெல்​வேலி முகமது அலி ஆகியோர் காவல்​துறை​யினரிடம் பிடிபட்​டுள்​ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QXe0wyj

Post a Comment

0 Comments