Crime

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் ரூ.35 லட்சம் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த பெண் உள்பட 6 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ரயில்வே யார்டு அருகே சட்டவிரோதமாக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போதை பொருள் தடுப்பு போலீஸார் மற்றும் ஆர்.கே.நகர் போலீஸார் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பில் நேற்று முன் தினம் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vqzMyXe

Post a Comment

0 Comments