
சென்னை: சென்னையில் மூன்று இடங்களில் 3,652 உடல்வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீஸார் 7 பேரை கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் அதிக அளவில் உடல்வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நடத்திய விசாரணையில், அவர்கள் சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்த சங்கர நாராயணன் (28), திருநீர்மலையை சேர்ந்த சண்முகம் (46) என்பதும், விற்பனைக்காக மாத்திரைகளை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 3,070 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oSdu1Tp
0 Comments