
திருவள்ளூர்: சிறுவன் கடத்தல் வழக்கில் தலைமறைவாகி உள்ள புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி பிற மாநிலங்களில் பதுங்கியிருக்கிறாரா? என, சிபிசிஐடி தனிப்படையினர், சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியுடன், தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ காதல் திருமண விவகாரத்தில் தனுஷின் 17 வயது தம்பியை கடத்தியது தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன் மூர்த்தி, போலீஸ் ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆகவே, முன் ஜாமீன் கோரி பூவை ஜெகன் மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, ஏடிஜிபியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4X79fZk
0 Comments