Crime

சென்னை: ஆன்​லைன் வர்த்​தகத்​தில் இரட்​டிப்பு லாபம் பெற்​றுத் தரு​வ​தாக தொழில் அதிபரிடம் ரூ.2.26 கோடி மோசடி செய்த கும்​பலைச் சேர்ந்த 4 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். சென்னை தி.நகரில் வசிப்​பவர் தொழில் அதிபர் கிஷோர். இவரது செல்​போன் வாட்​ஸ்​-அப் எண்​ணுக்கு அண்​மை​யில் தகவல் ஒன்று வந்​தது. அதில், ‘எங்​களது வாட்​ஸ்​-அப் குழு​வில் சேர்ந்து நாங்​கள் ஆலோ​சனை கூறும் பங்கு வர்த்​தகத்​தில் முதலீடு செய்​தால் இரட்​டிப்பு லாபம் கிடைக்​கும்’ எனக் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

இதை உண்​மையென நம்​பிய கிஷோர், அதிக லாபம் தரும் பங்கு வர்த்தக வலை​தளத்​தில் சேரு​வதற்​காக அவருக்கு வந்த வாட்​ஸ்​-அப் குழு​வில் சேர்ந்​துள்​ளார். பின்​னர் மோசடி நபர்​கள் அனுப்​பிய லிங்க் (Link) மூல​மாக ஆன்​லைன் பங்கு வர்த்தக வலை​தளத்​தில் கிளிக் செய்​து, பல்​வேறு வங்​கிக் கணக்​கு​களில் பல பரிவர்த்​தனை​களில் ரூ.2 கோடியே 26 லட்​சம் பணம் அனுப்​பி​யுள்​ளார். ஆனால் அவருக்கு லாப​மும் கிடைக்​க​வில்​லை, முதலீட்டு பணமும் திரும்ப கிடைக்​க​வில்​லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/im1zLVf

Post a Comment

0 Comments