
சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாக தொழில் அதிபரிடம் ரூ.2.26 கோடி மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை தி.நகரில் வசிப்பவர் தொழில் அதிபர் கிஷோர். இவரது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அண்மையில் தகவல் ஒன்று வந்தது. அதில், ‘எங்களது வாட்ஸ்-அப் குழுவில் சேர்ந்து நாங்கள் ஆலோசனை கூறும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை உண்மையென நம்பிய கிஷோர், அதிக லாபம் தரும் பங்கு வர்த்தக வலைதளத்தில் சேருவதற்காக அவருக்கு வந்த வாட்ஸ்-அப் குழுவில் சேர்ந்துள்ளார். பின்னர் மோசடி நபர்கள் அனுப்பிய லிங்க் (Link) மூலமாக ஆன்லைன் பங்கு வர்த்தக வலைதளத்தில் கிளிக் செய்து, பல்வேறு வங்கிக் கணக்குகளில் பல பரிவர்த்தனைகளில் ரூ.2 கோடியே 26 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். ஆனால் அவருக்கு லாபமும் கிடைக்கவில்லை, முதலீட்டு பணமும் திரும்ப கிடைக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/im1zLVf
0 Comments