Crime

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருமஞ்சன கோபுரம் அருகே கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக நிர்வாகியை வெட்டி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவண்ணாமலை அதிமுக முன்னாள் நகரச் செயலாளராகவும் கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்தவர் கனகராஜ். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவர், கடந்த 12-02-2017-ல் காலை 7 மணியளவில் நண்பர் கண்ணதாசன் என்பவருடன் நடைபயிற்சிக்காக திருவண்ணாமலை அரசு கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அண்ணாமலையார் கோயிலின் திருமஞ்சன கோபுரம் அருகே சென்றபோது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கனகராஜ் சென்ற வாகனத்தின் மீது மோதினர். இதில், கனகராஜ், கண்ணதாசன் ஆகியோர் நிலைதடுமாறி கீழே விழுந்ததும், மர்ம நபர்கள் 3 பேரும் கனகராஜை சரமாரியாக வெட்டினர். அதை தடுக்க வந்த கண்ணதாசனையும் வெட்டினர். இதில், கையில் வெட்டுக்காயம் ஏற்பட்ட கண்ணதாசன் உயிர் தப்பிய நிலையில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aLerw9u

Post a Comment

0 Comments