
சென்னை: போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தான் தவறு செய்து விட்டதாக அவர் கதறி அழுதார். இந்த விவகாரத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகள் உட்பட பலரும் சிக்க உள்ளதாகவும் அவர்களின் பெயர் பட்டியல் ரகசியமாக போலீஸார் சேகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஸ்ரீகாந்த் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போதைப் பொருள் காலி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவோடு இரவாக எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தயாளன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது, அவர் மாஜிஸ்திரேட்டிடம், நான் தவறு செய்து விட்டேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/46malbp
0 Comments