
போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் அடுத்த மாதம் 7-ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது வாக்குமூலத்தில் அதிமுக தொழிநுட்ப பிரிவில் நிர்வாகியாக இருந்த பிரசாத் குறித்தும் விவரித்துள்ளார்.
“என்னை வைத்து அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் ‘தீங்கிரை’ என்ற படத்தை இயக்கினார். ஒப்பந்தப்படி முழு பணத்தையும் அவர் தரவில்லை. நாங்கள் சந்தித்தபோதெல்லாம் அவர் என்னை மதுபானக் கூடத்துக்கு அழைத்துச் செல்வார். பின்னர் போதைப் பொருள் கொடுத்தார். கடன் உட்பட குடும்ப பிரச்சினையால் போதைப் பொருளை அடிக்கடி பயன்படுத்த தொடங்கினேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rDdctFU
0 Comments