Crime

விழுப்புரம்: மரக்காணம் அருகே 22 கடல் குதிரைகளை கடத்தியது மற்றும் கடலூரில் கைவினை பொருள் விற்பனை நிலையத்தில் 34 சுறா துடுப்புகளை பதுக்கி வைத்திருந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் கடத்தப்படுவதாக தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவுக்கு கிடைத்த தகவலின் பேரில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் கிராமம், கோனவாயன்குப்பம் ஐயனார் கோயில் அருகே திண்டிவனம் வனச்சரக அலுவலர் புவனேஷ் தலைமையிலான வனத்துறையினர் இன்று (ஜுன் 24-ம் தேதி) வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/efztJxs

Post a Comment

0 Comments