Crime

கோவை: ஈமு கோழி வளர்ப்பு மோசடி வழக்கில், சுசி ஈமு நிறுவன நிர்வாக இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7.89 கோடி அபராதமும் விதித்து கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு பார்ம் என்ற ஈமு கோழி வளர்ப்பு நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம், பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்றும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டு தொகை திருப்பித் தரப்படும் எனவும் விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால் பணத்தை திருப்பித் வழங்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SuVaAxY

Post a Comment

0 Comments