Crime

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே அரசு பேருந்து மீது மினி லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர்கள் இருவர் உயிரிழந்தனர். 38 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

தருமபுரியில் இருந்து இன்று (ஜூன் 6) பிற்பகல் அரசு பேருந்து ஒன்று, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வழியாக, திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் ருந்தை, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த பரமசிவம் (56) என்பவர் ஓட்டிச் சென்றார். பேருந்தில் நடத்துநர் ஆதிமூலம் உட்பட பயணிகள் 45 பேர் இருந்தனர். இதனிடையே, மத்தூரில் இருந்து போச்சம்பள்ளி நோக்கி எம்.சாண்ட் பாரம் ஏற்றிக் கொண்டு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை, சிவம்பட்டி கிராமத்தை சேர்ந்த இந்திரகுமார் (32) என்பவர் ஓட்டிச் சென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mj0xIPD

Post a Comment

0 Comments