Crime

சென்னை: நுங்கம்பாக்கம் மதுபான பாரில் நடந்த அடிதடி மோதல் விவகாரத்தில் முக்கிய திருப்பமாக உதவி ஆய்வாளர், காவலர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான பாரில் கடந்த மாதம் 22-ம் தேதி ஈசிஆரில் உணவகம் நடத்தி வரும் தூண்டில் ராஜாவுக்கும், ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் மகன் செல்வபாரதிக்கும் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பார் சூறையாடப்பட்டது. இதுகுறித்து பார் மேலாளர் அளித்த புகாரின்பேரில் நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iUyuHfC

Post a Comment

0 Comments