
கோவில்பட்டி: எட்டயபுரம் அருகேயுள்ள மேலக்கரந்தை பகுதியில் லாரி மீது கார் மோதியதில் தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றப் பணியாளர்கள் இருவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், மாவட்ட நீதிபதி உட்பட இருவர் காயமடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி வருபவர் பூரண ஜெய ஆனந்த் (55). இவர், திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் காரில் வந்தார். அவருடன் தனி பாதுகாவலர் நவீன்குமார், வழக்கறிஞர் எஸ்.தன ஜெயராமச்சந்திரன் (56), நீதிமன்றப் பணியாளர் ஸ்ரீதர் குமார் (37), நீதிமன்ற உதவியாளர் உதயசூரியன், நீதிமன்றப் பதிவுரு எழுத்தர் வாசு ராமநாதன் ஆகியோரும் வந்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XsYnu7S
0 Comments