Crime

பூந்தமல்லி: நசரத்பேட்டை அருகே அகரமேல் பகுதியில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அருகே உள்ள அகரமேல் பகுதியில் இன்று (மே 2) ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீஸார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேர் வாடகை வீட்டில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 8 பேரையும், ரவுடிகள் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து, நசரத்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XKD1p7J

Post a Comment

0 Comments