
ராமேசுவரம்: தமிழக கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 412 கிலோ கஞ்சா மற்றும் 1143 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு, பின்னர் சாலை வழியாக கொண்டு செல்லப்படுவதாக இலங்கை கடற்படையினர் அந்நாட்டு ராணுவத்தினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து நீர்கொழும்பு நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை ராணுவத்தினர் சோதனையில் ஈடுபட்டனர்.வாகன சோதனையின் போது, சந்தேகத்துக்கிடமான ஒரு சரக்கு வாகனத்தை சோதனையிட்டதில், அதிலிருந்து 80 பண்டல்களில் 412 கிலோ கஞ்சாவை ராணுவத்தினர் பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XNSFzjC
0 Comments