Crime

குன்றத்தூர்: குன்றத்தூர் சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக காதலனே நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது அம்பலம் ஆகியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோமா கோபா(19), தனது வீட்டின் அருகே வசித்து வந்த யாஸ்மதி போபாங்(17) என்ற சிறுமியை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சிறுமி யாஸ்மதியை ஆசை வார்த்தை கூறி, சோமாகோபா ஜார்க்கண்டில் இருந்து அழைத்து வந்து, குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், குமரன் நகர் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் தங்க வைத்து, கணவன்-மனைவி போல் வசித்து வந்துள்ளார். கூடவே தனது ஊரைச் சேர்ந்த நண்பர்களான சுனில் கோப் (19) மற்றும் பச்சா (19) ஆகியோரையும் தங்க வைத்துள்ளார். அனைவரும் திருமுடிவாக்கம் சிட்கோ பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LzyFTYP

Post a Comment

0 Comments