Crime

சென்னை: பார்க்கிங் விவகாரத்தில், நீதிபதி மகன் அளித்த புகாரில் நடிகர் தர்ஷனை போலீஸார் கைது செய்தனர். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் தர்ஷன். இவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் ‘கூகுள் குட்டப்பா' என்ற படத்தில் நடித்திருந்தார். விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சென்னை முகப்பேரில் வசிக்கிறார்.

இவரது வீட்டின் முன்பு உள்ள தேநீர் கடைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மகன் குடும்பத்தினருடன் காரில் வந்துள்ளார். அவர் தர்ஷனின் வீட்டு முன்பு காரை நிறுத்தி விட்டு தேநீர் கடைக்குள் சென்றுள்ளனர். நீண்ட நேரமாக அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை எடுக்குமாறு தர்ஷன் கூறியிருக்கிறார். இதனால், அவருக்கும், நீதிபதியின் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறி உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vZnkLjo

Post a Comment

0 Comments