Crime

சென்னை: பல்வேறு மாநில காவல்துறையினர் தேடி வந்த நிலையில் 14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தமிழகத்தை சேர்ந்த மாவோயிஸ்ட்டை கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் சின்னகார்த்திக், பன்னாபுரம் கார்த்திக், ராஜேஷ், குமார், கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் வலம் வந்துள்ளார். இவர், இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான சிபிஐ (மாவோயிஸ்ட்) இயக்கத்தில் உறுப்பினராக இணைந்து, அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் பரப்புவதிலும் சட்டவிரோவிதமாக ஈடுபட்டு வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z9ZnpaG

Post a Comment

0 Comments