Crime

திருவள்ளூர்: சென்னை, கொளத்தூர், ஜி.கே.எண்.காலணி, ஆசாத் தெருவில் வசித்து வரும் கலைவாணன் என்பவர், திருவள்ளூர் மாவட்டம், ஆவடி காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எங்கள் பகுதியில் உள்ள சோலை அம்மன் நகரை சேர்ந்த விக்னேஷ், அவரது மனைவி ரேகா இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு ஜீலை மாதம் என்னை சந்தித்துப் பேசினர்.

அப்போது, அவர்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அந்த பணத்தை இரட்டிப்பாக ஆக்கி தருவதாகக் கூறினர். அப்போது, நான் எங்களிடம் பணம் இல்லை என்று கூறினேன். அதற்கு அவர்கள் தங்களுடைய நண்பர் சதீஷ் என்பவர் வங்கியில் வேலை பார்ப்பதாகவும், உங்களுக்கு நாங்களே அவரிடம் சொல்லி உங்களுடைய ஆவணங்களை வைத்து வங்கியில் கடன் வங்கி தருகிறோம் என்றும், கடனை தாங்களே அடைத்து விடுவதாகவும் கூறினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gsNeBmi

Post a Comment

0 Comments