
சேலம்: கெங்கவல்லி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஆட்டோ ஓட்டுநர், மனைவி மற்றும் 3 குழந்தைகளை அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த இரு குழந்தைகள் உயிரிழந்தனர். காயமடைந்த மனைவி, மற்றொரு மகள் மற்றும் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி அருகேயுள்ள 74-கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (47). இவரது மனைவி தவமணி(38), குழந்தைகள் விஜயதாரணி(13), அருள்குமாரி(10), அருள்பிரகாஷ்(5). சில ஆண்டுகளுக்கு முன்னர் நெய்வேலிக்குச் சென்ற அசோக்குமார், அங்கு சகோதரருடன் தங்கி, ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கெங்கவல்லி வந்த அசோக்குமார், வீட்டில் இருந்தமனைவி, குழந்தைகளை அரிவாளால் வெட்டினார். இதுகுறித்து தகவலறிந்த கெங்கவல்லி போலீஸார் அங்கு சென்றபோது, மகள் விஜயதாரணி, மகன் அருள்பிரகாஷ் ஆகியோர் இறந்து கிடந்ததும், மனைவி தவமணி, மற்றொரு மகள் அருள்குமாரி ஆகியோர் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wFib18Y
0 Comments