
சென்னை: சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மணிப்பூர் பெண்ணிடம் செல்போன் பறித்த இளைஞர், காதலியுடன் கைது செய்யப்பட்டார். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் ஆஷா பேம் (24). சென்னை மேற்கு மாம்பலத்தில் தங்கி மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 5-ம் தேதி காலை 6 மணி அளவில் தோழிகள் இருவருடன் மெரினா கடற்கரைக்கு புறப்பட்டார். பேருந்தில் ஏறுவதற்காக கோடம்பாக்கம் சாலையில் தோழிகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இளம்பெண்ணுடன் வந்த இளைஞர் ஒருவர், திடீரென ஆஷா பேமின் ரூ.48 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின்பேரில் குமரன் நகர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6VQSeov
0 Comments