
உதகை: சமீப காலமாக ‘டிஜிட்டல் கைது' எனப்படும் சைபர் மோசடியில் இணைய வழி மோசடி கும்பல் ஈடுபட்டு வருகிறது. இவர்கள் அரசு அதிகாரிகள் அல்லது மத்திய புலனாய்வு அதிகாரிகள்போல் நடித்து ஆடியோ, வீடியோ அழைப்புகள் மூலமாக மிரட்டுகின்றனர்.
இதை நம்பி அச்சமடைந்து, மோசடி கும்பலிடம் பலர் பணத்தை இழக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் குன்னுரை சேர்ந்த இளம் பெண் ஒருவரை டிஜிட்டல் கைது என்று கூறி, 8 நாட்கள் வீட்டு காவலில் வைத்து ரூ.15 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டது. தற்போது உதகையை சேர்ந்த இளம் பெண் ஒருவர், டிஜிட்டல் கைது என்று கூறி ஏமாற்றப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2CNGue8
0 Comments