
இணைய வழியில் பல்வேறு மோசடிகள் அரங்கேற, அவற்றை சைபர் க்ரைம் போலீஸார் கண்காணித்து தடுத்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் நடக்கும் இந்த இணைய வழி குற்றங்கள் குறித்து, சைபர் க்ரைம் போலீஸாரிடம் கேட்டபோது அவர்கள் அளித்த விவரங்கள்: இணைய வழியில் பல்வேறு விதமாக மோசடிகள் நடக்கின்றன. ‘ஆன்லைன் ஆப் மூலம் வேலை உள்ளது.
இதில் உங்களுக்கு இரு மடங்காக வருவாய் கிடைக்கும். ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் தொகை கிடைக்கும், கிரிப்டோ கரன்ஸி வாங்குங்கள், இந்த டாஸ்க்கை முடித்தால் ஏகப்பட்ட பணம், பிட் காயினில் அருமையான வருமானம்’ என்று பலவாறாக இணைய வழி மோசடி அழைப்புகள் வருகின்றன. நாங்கள் ஏற்கெனவே பலமுறை கூறி வருகிறபடி இந்த அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். உங்களது வங்கிக் கணக்கு எண், அதன் ரகசிய எண் ஆகியவற்றை யாரிடமும் தெரிவிக்க கூடாது. பிட் காயின், கிரிப்டோ கரன்ஸி போன்றவை இந்தியாவில் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வர்த்தகம் அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/I5azhe1
0 Comments