Crime

கிளாம்பாக்கம் / சென்னை: கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த மேற்குவங்கத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 3 மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த தோழியுடன் சேலத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவரது மற்றொரு தோழி சென்னை மாதவரத்தில் கணவருடன் தங்கியுள்ளார். கணவர் வேலைக்கு சென்று விடுவதால் தோழிக்கு உதவியாக இருக்க மேற்குவங்க பெண் நேற்று முன் தினம் இரவு சென்னை வந்துள்ளார். இரவு 10 மணிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே மாதவரம் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். வெகுநேரம் ஆகியும் பேருந்து வரவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tibUu2n

Post a Comment

0 Comments