Crime

ராமநாதபுரம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒப்பந்ததாரர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இதேபோல, தேனி அருகே நேரிட்ட மற்றொரு விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் அருகே மதுரை-ராமேசுரம் தேசிய நெடுஞ்சாலையில், அச்சுந்தன்வயல் சேதுபதி அரசு கலைக் கல்லூரி முன், ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், ராமநாதபுரம் நோக்கி வந்த காரும் நேற்று நேருக்கு நேர் மோதின. இதில் கார் கவிழ்ந்து நொறுங்கியது. காரில் பயணித்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் குத்தாலிங்கம் (48), ராதாகிருஷ்ணன் (55), சின்னமுனியாண்டி (45) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த கருமலையான் (35) ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விபத்தில் அரசுப் பேருந்தில் பயணித்த ஒரு பெண் உட்பட 4 பேர் லேசான காயமடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/h27H9Dg

Post a Comment

0 Comments