Crime

புதுச்சேரி: புதுச்சேரி தவளக்குப்பம் தானாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவர், அதே பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியிடம் கடந்த 4 மாதங்களாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அச்சிறுமிக்கு நேற்று உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுபரிசோதித்தபோது, சிறுமி பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோது, ஆசிரியர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று இதுகுறித்து கேட்டபோது, பள்ளிநிர்வாகம் தரப்பில் சரியான பதில் கூறவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ONXf6Hb

Post a Comment

0 Comments