
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே வீட்டில் புகுந்து விவசாயியை தாக்கி, 22 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி அணிந்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த தண்ணீர்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுந்தரேசன் (55). இவரது மனைவி மஞ்சுளா(50). இவர்கள் இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில், வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து சத்தத்தை கேட்டு எழுந்த சுந்தரேசன் கதவைத் திறந்த போது, முகமூடி அணிந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZhxHqta
0 Comments