
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பெயரில் போலியாக இணையதள முகவரி தொடங்கி, பக்தர்களிடம் பண மோசடி செய்த புகார் தொடர்பாக கோயில் குருக்கள் உட்பட 2 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் நிர்வாக மேலாளர் எஸ்.சீனிவாசன், திருநள்ளாறு காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார். அதில், “சுவாமிகளுக்கு அபிஷேகம், அன்னதானம், சிறப்பு அர்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை, ஹோமம், தங்கும் விடுதி உள்ளிட்டவற்றுக்கு வெளியூர் பக்தர்கள் கோயில் இணையதள முகவரியில் பதிவு செய்கின்றனர். பிரசாதங்களை அஞ்சல் வழியாக பெறுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Zu8kSPz
0 Comments