
சென்னை: சென்னை துறைமுகம் வழியாக ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சைப் பட்டாணி முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில், சுங்கத் துறை அதிகாரிகள் 3 பேர் உட்பட 5 பேரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. அயல்நாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் கொள்கைப்படி, பச்சைப் பட்டாணியை கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். ஒரு கிலோ பச்சைப் பட்டாணி இறக்குமதி செய்ய ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/V0PosDb
0 Comments