Crime

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஆம்புலன்ஸ் மீது லாரி மோதியதில் நோயாளி உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஆம்புலன்ஸில் வந்த நான்கு பேர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்தவர் வரிசை கனி (65). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் உறவினர்கள் நேற்று நள்ளிரவு 11.45 மணியளவில் தனியார் ஆம்புலன்ஸில் ராமநாதபுரத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வாலாந்தரவை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிவிட்டு, ராமநாதபுரம் நோக்கி திரும்பிய விறகு லாரி ஆம்புலஸின் முன் பகுதியில் மோதியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WlZA0yI

Post a Comment

0 Comments