Crime

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே இரவில் தனியாகச் சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், டிச. 29-ம் தேதி இரவு 8.30 மணியளவில் ஆட்டோவில் சென்றார். பின்னர் இயற்கை உபாதையைக் கழிக்கச்சென்றபோது அப்பகுதி யில் நின்ற 4 இளைஞர்கள் அப்பெண்ணைத் தாக்கியதோடு அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து அப்பெண் டிச.30-ம் தேதி ராமநாதபுரம் நகர் போலீஸில் புகார் அளித்தார். அன்றைய தினம் போலீஸார் விசாரணை செய்துவிட்டு அந்த இளைஞர்களை அனுப்பி விட்டனர். நேற்று முன்தினம் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், உதவிக் கண்காணிப்பாளர் சிவராமன் ஆகியோர் தொடர் விசாரணை செய்தனர். விசாரணையில் புத்தேந்தல் கிராமத்தைச் சேர்ந்த புவனேஷ் குமார்(27), சரண்முருகன் (27), செல்வகுமார்(27), குட்டி என்ற முனீஷ் கண்ணன் (26) ஆகியோர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6lPcXBm

Post a Comment

0 Comments