
சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பெண்கள் வார்டில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மருத்துவமனை பணியாளர்கள் விரைந்து வந்து அவரை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட அந்த நபர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (25) என்பது தெரியவந்தது. இவருடைய தாயார் உடல்நலக் குறைவால் அதே வார்டில் சிகிச்சை பெற்று வருவதால், அவரை பார்த்துக் கொள்ள அந்த வார்டுக்கு சதீஷ்குமார் வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7GjVifD
0 Comments