Crime

சென்னை: கீழ்ப்​பாக்கம் அரசு மருத்​துவ​மனை​யில் சிகிச்​சை​யில் இருந்த பெண்​ணிடம் பாலியல் அத்து​மீறலில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்னை வில்​லிவாக்கம் பகுதி​யைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர், கீழ்ப்​பாக்கம் அரசு மருத்​துவ​மனை​யில் உள்நோ​யாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் பெண்கள் வார்​டில் நேற்று அதிகாலை 1.30 மணியள​வில் தூங்​கிக் கொண்​டிருந்த​போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் பாலியல் அத்து​மீறலில் ஈடுபட்​டுள்​ளார்.

அப்போது மருத்​துவமனை பணியாளர்கள் விரைந்து வந்து அவரை மடக்​கிப் பிடித்​து போலீ​ஸாரிடம் ஒப்படைத்​தனர். விசாரணையில், பிடிபட்ட அந்த நபர் ராணிப்​பேட்டை மாவட்​டத்தை சேர்ந்த சதீஷ்கு​மார் (25) என்பது தெரிய​வந்​தது. இவருடைய தாயார் உடல்​நலக் குறைவால் அதே வார்​டில் சிகிச்சை பெற்று வருவ​தால், அவரை பார்த்​துக் கொள்ள அந்த வார்​டுக்கு சதீஷ்கு​மார் வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7GjVifD

Post a Comment

0 Comments