
சென்னை: வருமான வரித்துறை அதிகாரிகளுடன் கைகோத்து செயல்பட்டு, கோடி கணக்கான ஹவாலா பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள சைதாப்பேட்டை சிறப்பு எஸ்.ஐ.யை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அருகே கடந்த மாதம் முகமது கவுஸ் என்பவரை கத்தி முனையில் கடத்தி ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. ராஜா சிங், வருமான வரித்துறை அதிகாரிகள் பிரபு, தாமோதரன், பிரதீப் ஆகிய 4 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2iZ6APq
0 Comments