
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாகரை சேர்ந்தவர் அஜய் அகர்வால். இவர், 'அகர்வால் டிரேடர்ஸ்' என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்து வந்துள்ளார். இவரது கடை மற்றும் குடோன்களில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணைய (ஃபாசி) அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர்.
இதில் அஜய் அகர்வால், ஆபத்தான ரசாயனங்களை பயன்படுத்தி போலி பால் மற்றும் பன்னீர் தயாரித்து வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் இவற்றை அவர் சுமார் 20 ஆண்டுகளாக விற்பனை செய்து வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JLPknwD
0 Comments