
சென்னை: மதுரவாயல், புதிய சுப்ரமணியம் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஹரிபிரசாத் (30). பாரிமுனையில் உள்ள மூலிகை (ஹெர்பல்) பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல், இவர் கடந்த 14-ம் தேதி மாலை, கடைகளில் வசூல் செய்த பணத்துடன் இருசக்கர வாகனத்தில் பாரிமுனை, வெங்கடாச்சல முதலி தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பின் தொடர்ந்து 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 கொள்ளையர்கள் ஹரிபிரசாத்தை மறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணப்பையை பறித்துத் தப்பினர். இதுதொடர்பான வீடியோ, சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. ஹரிபிரசாத் அளித்த புகாரின்பேரில் பூக்கடை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/d691oiy
0 Comments