Crime

சென்னை: மதுர​வாயல், புதிய சுப்​ரமணியம் நகர் பகுதி​யில் வசித்து வருபவர் ஹரிபிரசாத் (30). பாரி​முனை​யில் உள்ள மூலிகை (ஹெர்​பல்) பொருட்கள் விற்பனை செய்​யும் கடையில் பணம் வசூல் செய்​யும் வேலை செய்து வருகிறார். வழக்​கம்​போல், இவர் கடந்த 14-ம் தேதி மாலை, கடைகளில் வசூல் செய்த பணத்​துடன் இருசக்கர வாகனத்​தில் பாரி​முனை, வெங்​கடாச்சல முதலி தெரு வழியாக சென்று கொண்​டிருந்​தார்.

அப்போது, அவரை பின் தொடர்ந்து 2 இருசக்கர வாகனங்​களில் வந்த 4 கொள்​ளை​யர்கள் ஹரிபிரசாத்தை மறித்து, கத்தி​யைக் காட்டி மிரட்டி அவர் வைத்​திருந்த பணப்​பையை பறித்​துத் தப்பினர். இதுதொடர்பான வீடியோ, சமீபத்​தில் சமூக வலைதளங்​களில் பரவி வைரலானது. ஹரிபிரசாத் அளித்த புகாரின்பேரில் பூக்கடை காவல் நிலைய போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/d691oiy

Post a Comment

0 Comments