
மதுரை: கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்திய ரூ. 50 லட்சம் மதிப்புள்ள கூலிப், குட்கா, புகையிலை பொருட்களை மதுரை புதூர் பகுதியில் போலீஸார் மடக்கி பிடித்தனர்.
மதுரை நகரில் காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின்பேரில், கஞ்சா,போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை தடுக்க மாநகர காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்கின்றனர். இந்நிலையில், மாநகர துணை ஆணையர் கருண் கராட் மேற்பார்வையில் உதவி ஆணையர் சிவசக்தி, புதூர் காவல் ஆய்வாளர் மாடசாமி அடங்கிய குழுவினர் சர்வேயர் காலனி 120 அடி ரோட்டில் நேற்று முன்தினம் இரவில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/869CfA0
0 Comments