Crime

மத்திய பிரதேசத்தில் லோக் ஆயுக்தா போலீஸார் நடத்திய சோதனையில், ஓய்வுபெற்ற காவலருக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்பிலான அசையும் சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவராக பணியாற்றிய ஆர்.கே.சர்மா, 2015-ல் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மகன் சவுரப் சர்மாவுக்கு கருணை அடிப்படையில் மாநில போக்குவரத்து துறையில் காவலர் பணி வழங்கப்பட்டது. அவர் கடந்த 2023-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். இவர் பணியில் இருந்தபோது ஊழல் செய்ததாகவும் இதன்மூலம் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, தாய், மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் பெயரில் பள்ளிக்கூடம், ஓட்டல் என ஏராளமான சொத்துகளை வாங்கியதாக புகார் எழுந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FPpcbzt

Post a Comment

0 Comments