
தாம்பரம்: நாவலூர் மற்றும் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் எலைட் எனப்படும் அயல்நாட்டு தயாரிப்பு மதுபான வகைகளை விற்பனை செய்யும் கடையில், விற்பனை செய்யப்பட்ட ரூ.1.49 கோடி மதிப்பிலான மதுபாட்டில்களுக்கான தொகையை, அரசு கணக்கில் செலுத்தாமல் உள்ளதை சிறப்பு தணிக்கை குழுவினர் கண்டுபிடித்து நோட்டீஸ் வழங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர் பகுதியான நாவலூர் மற்றும் ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் நிறுவனத்தின் எலைட் எனப்படும் அயல்நாட்டு தயாரிப்பான உயர்ரக மதுபான வகைகள் விற்பனை செய்யப்படும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளில், 2 மேற்பார்வையாளர்கள் மற்றும் 4 விற்பனையாளர்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில், மேற்கண்ட மதுபானம் விற்பனை செய்யும் கடைகளில் கடந்த வாரம் ஆண்டு தணிக்கை நடைபெற்றதாக தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RsaWUiV
0 Comments