Crime

புதுச்சேரி: டிஜிட்டல் அரெஸ்ட் எனக்கூறி நாடு முழுவதும் ரூ. 66.11 கோடி மோசடி செய்த கொல்கத்தாவைச் சேர்ந்த மூவரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் இன்று கைது செய்தனர்.

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த அழகம்மை, சைபர் கிரைம் போலீஸில் கடந்த ஜூன் 1-ம் தேதி புகார் தந்தார். அதில், அறிமுகமில்லாத நபர்கள் வாட்ஸ்அப் மூலமாக தங்களை மும்பை போலீஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, புகார்தாரரிடம், உங்களுடைய ஆதார் மற்றும் செல்போன் எண்களை பயன்படுத்தி கம்போடியா மற்றும் தைவான் நாடுகளுக்கு மும்பையில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் போலி பாஸ்போர்ட்டுகள் கடத்தப்பட்டுள்ளது என்று கூறி, டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zSjBibm

Post a Comment

0 Comments