
சென்னை: தி.நகரில் வங்கிக்குள் நுழைந்து, மேலாளரை அரிவாளால் வெட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். தி.நகர் பர்கிட் சாலையில் பிரபலமான தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், சென்னை பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த தினேஷ் (33) என்பவர் சீனியர் மேலாளராக பணிபுரிகிறார்.
நேற்று இவர் பணியில் இருக்கும்போது, மதியம் 12.45 மணியளவில் வங்கிக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் தயாராக கொண்டு வந்த அரிவாளால் தினேஷை சரமாரியாக வெட்டினார். இதைக் கண்டு வங்கி ஊழியர்களும், வங்கி வாடிக்கையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள், தாக்குதல் நடத்திய இளைஞரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D9nYayz
0 Comments