
மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் உதவி ஜெயிலர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும், அவரை பணியிடை நீக்கம் செய்து சிறைத் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வெளியே வந்த ஒருவர், பைபாஸ் சாலையில் உணவகம் நடத்தி வருகிறார். இவரது உணவகத்துக்கு மதுரை மத்திய சிறை உதவி ஜெயிலர் பாலகுருசாமி (52) அடிக்கடி உணவு சாப்பிட வந்துள்ளார். அப்போது, உணவக உரிமையாளரின் மகள் மற்றும் பேத்தியிடம் தவறான நோக்குடன் பேசினாராம். இதை உணவக உரிமையாளரின் மகள் கண்டித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZwysAuz
0 Comments