
சென்னை: குடிநீர் இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவி பொறியாளருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையை சேர்ந்த பரந்தாமன் என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு தனது வீட்டுக்கு புதிய குடிநீர் இணைப்பு கேட்டு தண்டையார்பேட்டையில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தில் விண்ணப்பம் கொடுத்துள்ளார். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து புதிய குடிநீர் இணைப்பு வழங்க, தண்டையார்பேட்டை குடிநீர் வழங்கல் வாரிய உதவி பொறியாளர் பார்த்தசாரதி, ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QGh5mFw
0 Comments