Crime

திருச்சி: திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஆர்சி மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்கள் அரையாண்டு கடைசித் தேர்வு எழுதிவிட்டு, இன்று மதியம் 2 மணியளவில் குடமுருட்டி அருகே உள்ள அய்யாளம்மன் காவிரி படித்துறைக்கு குளிக்க வந்தனர்.

படித்துறையில் குறைந்தளவு தண்ணீர் சென்றதால், ஆற்றின் மையப்பகுதிக்கு குளிக்கச் சென்றனர். தெர்மாகோல் மீது படுத்துக் கொண்டு சிலர் குளித்தனர். அப்போது சுமார் 3.45 மணியளவில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், 2 மாணவர்கள் நீரில் சிக்கிக் கொண்டனர். அவர்களை காப்பாற்றச் சென்ற மாணவனும் சிக்கினார். ஓரளவு நீச்சல் தெரிந்த 7 மாணவர்கள் கரை சேர்ந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gR7A62n

Post a Comment

0 Comments