Crime

பொழிச்சலூர்: பல்லாவரம் அருகே கோயிலில் மாற்றுத் திறனாளியை கடுமையாகத் தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் மகனை போலீஸார் தேடி வருகின்றனர்.

பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், விநாயகா நகர், மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் ஞானமணி. இவர், பொழிச்சலூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது மகன் சரவணன் (35). மாற்றுத் திறனாளியான இவர், நேற்று மாலை, அதே பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோயிலுக்குள் சென்றார். அப்போது, ஏற்கெனவே கோயிலின் உள்ளே இருந்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜாவின் மகன் தினேஷ் பாபு (35) என்பவருக்கும், சரவணனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முக்கிய நிலையில், தினேஷ்பாபு தனது நண்பருடன் சேர்ந்து சரவணனை சரமாரியாக தாக்கத் தொடங்கினார். பதிலுக்கு சரவணனும் தனது ஊன்றுகோலால் தினேஷ்பாபுவை தாக்கினார். இதில், இருவருக்கும் காயம் ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VLCmbfS

Post a Comment

0 Comments